ஆசிரியை திருமதி சேஷா கற்பகம்

திருமதி சேஷா கற்பகம் அவர்கள் குரு கலைமாமணி யோகச்சரணி திருமதி மீனாட்சி தேவி பாவனானி அவர்களிடம் பரத நாட்டியம் கற்கதொடங்கினார். புதுவை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பாரதியார் பல்கலைக் கூடத்தில் இணைந்து குரு கலைமாமணி திருமதி ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களிடமும், டாக்டர் திருமதி சாந்தி பாபு அவர்களிடமும், கலைமாமணி திருமதி விசித்திரா தினகரன் அவர்களிடமும் மோகினி ஆட்டம் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த பதினெட்டு வருடங்களாக பிரான்ஸில் சிலம்பொலி நாட்டிய பள்ளியை நிறுவி பல மாணவியர்களுக்கு முறையாக பரத நாட்டியம் பயிற்றுவித்து வருகிறார்.